Category Archives: Upcoming Events
மகா வைத்யநாத சிவன்
கயிலாய நாதனாகிய சிவபெருமானைப் பல மார்க்கங்களின் மூலம் வழிபட்டு நற்கதி பெற்ற மகான்கள் பலருள் நாதோபாசனை மூலம் ஆராதனை செய்து அருள்பெற்ற பக்தர்களுள் மகா வைத்யநாத சிவன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். நன்றி : வலைத் தளம் தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் ஸ்ரீ துரைசுவாமி ஐயருக்கும் ஸ்ரீமதி அருந்ததி அம்மையாருக்கும் மகவாக 26.5.1844 அன்று தோன்றியவர் … Continue reading
ஆன்மீக அனுபவங்கள் – 2
சிவபாத சேகரன் Photo Couurtesy : From WEB மனித வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான அனுபவங்கள். அவை கற்றுத் தரும் பாடங்கள் நம் நெஞ்சை விட்டு நீங்காதவைகளாக அமைந்து விடுகின்றன. அவற்றுள் சில கசப்பான அனுபவங்களாகவும் இருக்கலாம். மனத்தைக் காயப் படுத்தி இருக்கலாம். அதனால் அச் சம்பவத்தை மறந்துவிடவே முயற்சி செய்கிறோம். ஆனால் அம்முயற்சி … Continue reading
ஆன்மீக அனுபவங்கள்
சிவபாதசேகரன் நாத்திகரையும் ஆத்திகர் ஆக்கிய திருவாசகம் ஆன்மிகம் என்பது மத நம்பிக்கை சார்ந்தது. இந்த நம்பிக்கையின் அளவு சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் காணப்படும். மற்றும் சிலருக்குத் துளிக்கூட இல்லாமலும் காணப்படும். ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடையேயும் இத்தகைய வேற்றுமைகள் காணப் படுவதைப் பார்க்கிறோம். வளர்க்கும் விதம் ஒன்றாகவே இருந்தாலும் எப்படி இவ்வாறு நிகழ்கிறது? … Continue reading
ஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் ஸ்ரீ அகஸ்த்யாய நம: ஓம் ஸ்ரீ கும்ப ஸம்பூதாய நம: ஓம் ஸ்ரீ லோபாமுத்ராபதயே நம: ஓம் ஸ்ரீ விபவே நம: ஓம் ஸ்ரீ வேதவிதே நம: ஓம் ஸ்ரீ வேத கர்த்ரே நம: ஓம் ஸ்ரீ வேதாந்த ஞானபாஸ்கராய நம: ஓம் ஸ்ரீ விசவ வந்த்யாய நம: ஓம் ஸ்ரீ விச்வ ரூபிணே … Continue reading
தியாகராஜ லீலை
திருவாரூர்க் கோயிலைக் காண்போருக்கு மீண்டும் அதனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். அந்த ஊரில் பிறந்தவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று தல புராணம் கூறும். ” திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரரின் அமுத வாக்கு. தியாகராஜப் பெருமானின் சாயரக்ஷை பூஜையைக் காண்பதற்காகப் பலமுறை அங்கு சென்றிருந்தாலும் ஒரு முறை அங்கு … Continue reading
ஆகமக் கல்வி
அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேரருளாளன் பிடவூரன் தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர் அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே. — சுந்தரர் தேவாரம் “ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் … Continue reading
ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்
ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள் சிவபாதசேகரன், சென்னை ஞானம் என்பது கற்கும் சரக்கு அல்ல. ஞானமயமான இறைவனிடமிருந்தோ அல்லது ஞானாசிரியனிடமிருந்தோ பெறப்படுவது அது. ஆதி குருவான பரமேசுவரன் யாரிடத்தும் கலைஎதுவும் கற்காமலேயே, எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாக விளங்கி, ஆல மர நீழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானப்பொருளைச் சொல்லாமல் சொல்லி அருளியபடியால், “ கலை … Continue reading
ஹரதத்தர் சரித்திரம்
முன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், … Continue reading
அறுபத்துமூன்று நாயன்மார்கள்
பெரிய புராணம் – முன்னுரை சிவபெருமான் மீது கொண்ட ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச் செய்த பெரியவர்களது சரிதத்தைச் … Continue reading