Author Archives: ardhrafoundation
செருத்துணை நாயனார்
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள சன்னா நல்லூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் உள்ள திருமருகலில் இருந்து திருச்செங்காட்டங்குடி வழியாகத் திருப்பயத்தங்குடி(திருப்பயற்றூர்) என்ற பாடல் பெற்ற தலத்திற்கு மிகவும் அண்மையில் உள்ள கீழத்தஞ்சை என்ற ஊரில் தோன்றியவர் செருத் துணை நாயனார். இவ்வூரை ” மருகல் நாட்டுத் தஞ்சாவூர் ” எனக் குறிப்பார் சேக்கிழார் பெருமான். இவர் … Continue reading
அதிபத்த நாயனார்
நாகப்பட்டினத்தில் பரதவர் குலம் விளங்கத் தோன்றியருளியவர் அதிபத்தர். நுளையர்பாடிக்குத் தலைவராக இருந்த இவர், சிவ பெருமானிடத்துப் பேரன்பு பூண்டு , தங்கள் குலத் தொழிலான மீன் பிடித்தலைச் செய்து வந்தபோது, வலையில் அகப்படும் மீன்களுள் ஒன்றை சிவனுக்கென்று கடலில் விட்டு விடுவதை நியமமாகக் கொண்டிருந்தார். நாயனாரது பேரன்பை உலகு அறியும் வண்ணம் இறைவர் செய்த திருவிளையாடலால், … Continue reading
செம்பியன் மாதேவியார்
சோழப் பேரரசர்கள் சிவபக்தியோடு திகழ்ந்ததுடன் ஏராளமான சிவாலயங்களைக் கட்டியும்,திருப்பணிகள் செய்வித்தும்,விழாக்கள் நடத்தியும், அக்கோயில்களின் வளர்ச்சிக்கு நிபந்தங்கள் ஏற்படுத்தியும் அரும் தொண்டாற்றினர். அதில் பெரும் பங்கு ஆற்றியவர், கண்டராதித்த சோழரின் பட்ட மகிஷியாகத் திகழ்ந்தவரும் , செம்பியன் மாதேவியார் என்று போற்றப்படுபவரும் ஆன அரசியார் ஆவார். செம்பியன் மாதேவியார் வாழ்ந்த காலம் பத்தாம் நூற்றாண்டு என்பர். … Continue reading
முனையடுவார் நாயனார்
சோழ நாட்டிலுள்ள மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் முனையடுவார் நாயனார். இத்தலத்து இறைவரை இந்திரன், சூரியன்,காளி,நண்டு ஆகியோர் பூசித்துள்ளனர். அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் இத்தலத்தின் மீது தேவாரத் திருப்பதிகங்கள் பாடி அருளியுள்ளனர். உலகில் பிறந்த பயனை அடைவது, சிவனடியார்களுக்கு உணவளிப்பதும், பெருமானது திருக் கோயில்களில் திருவிழாக் காண்பதும் ஆகிய … Continue reading
நமிநந்தி அடிகள் நாயனார்
சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர் என்ற தலத்தில் அவதரித்தவர் இந்நாயனார். அந்தணர் குலம் ஒங்க அவதரித்த இப்பெருந்தகையார், வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர். சாம கண்டனாகிய பரமேசுவரனது செம்பொற்பாதத்தில் சிந்தை நீங்காது தொண்டு புரிந்தவர். திருவாரூருக்குச் … Continue reading
Kumbabhishekams & Uthsavams
Kumbabishekam and renovation work are kept on hold due to the outbreak of Corona Virus since March 2020. Dates can be announced only when the situation returns to normal. Siva temples at Saakkai and Umamaheswarapuram where the foundation has participated … Continue reading
புகழ்த்துணை நாயனார்
அரிசில்கரை புத்தூர் என்ற சோழ நாட்டுத்தலம் அரிசிலாற்றின் கரையில் இருப்பது. மூவர் தேவாரமும் பெற்றது. இத்தலத்துப் பெருமானை நித்தலும் ஆராதித்து வந்தவர் … Continue reading
சோமாசி மாற நாயனார்
“ அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் “ என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் போற்றப்பட்டவர். மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கில் உள்ள அம்பர் … Continue reading
ஸ்ரீ திருமூலதேவ நாயனார் அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் அத்புதாயநம: அரண்யாய நம: அனாத ரக்ஷகாய நம: அனந்தாய நம: அபராஜிதாய நம: அச்வத்த வ்ருக்ஷப் ப்ரியாய நம: அகஸ்த்யப் ப்ரியாய நம: அமராய நம: … Continue reading
விநாயக சதுர்த்தி & வரலக்ஷ்மி பூஜை நைவைத்தியங்கள்
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும் பலவகையான நைவைத்தியங்களில் கொழுக்கட்டை முக்கியமானது. வெல்லக்கொழுக்கட்டையும்,உப்புக் கொழுக்கட்டையும் செய்யும் முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வெல்லக்கொழுக்கட்டை: தேவையான பொருள்கள்: பச்சரிசி : ஒரு டம்ளர் தேங்காய்: ஒன்று வெல்லம்: 100 கிராம் ஏலக்காய் பொடி: 1/2 டீஸ்பூன் பச்சரிசியை 45 … Continue reading