சோழ நாட்டிலுள்ள மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் முனையடுவார் நாயனார். இத்தலத்து இறைவரை இந்திரன், சூரியன்,காளி,நண்டு ஆகியோர் பூசித்துள்ளனர். அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் இத்தலத்தின் மீது தேவாரத் திருப்பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.
உலகில் பிறந்த பயனை அடைவது, சிவனடியார்களுக்கு உணவளிப்பதும், பெருமானது திருக் கோயில்களில் திருவிழாக் காண்பதும் ஆகிய சிவ புண்ணியங்களால் அடையலாம் என்பதை நாயன்மார்கள் பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர். அவர்களுள் சிவனடியார்களுக்கு உணவிடுவதை வழித் தொண்டாகக் கொண்டவர் இவர். அதிலும் அச்செயலை மிகுந்த அன்போடும் நெறி பிழையாமலும் ஆற்றியவர்.
போர்க் களத்தில் தோற்றவர்கள் தன்னிடம் வந்து அப்பகைவர்களை வென்று வந்தால் மாநிதியம் தருவதாகக் கூறினால்,அதனை ஏற்றுப் போர்க்களத்திற்குச் சென்று,பகைவரை வென்று, அப் போது கைப்பற்றிய பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து அவற்றைக் கூலியாக ஏற்றார்.. இவ்வாறு போர் முனைக்குச் சென்று பகைவரை வென்று வந்ததால் முனை அடுவார் என்று அழைக்கப் பட்டார்.
இவ்வாறு பெற்ற பொருள்கள் அனைத்தையும் சிவனடியார்களுக்கு நிரம்பக் கொடுத்ததோடு, சர்க்கரை, வாசனை உள்ள நெய், கறி, தயிர், பால் ஆகியவற்றோடு கூடிய சுவை உணவை அளித்து வந்தார். இதனைப் ” பன்னெடுநாள் ” செய்துவந்ததால் பெற்ற சிவபுண்ணியம், உமைகணவனது திருவருளால் அவரைச் சிவலோகத்தில் என்றும் இருக்குமாறு செய்தது. அதற்குக் காரணம் , நாயனாரது ” மாறாது அளிக்கும் வாய்மை ” என்று பெரிய புராணம் வாயிலாக அறிகிறோம்.
முனையடுவரது குருபூசைத் திருநாள்: பங்குனி மாதத்துப் பூரம்.
முனையடுவார் நாயனார்
நமிநந்தி அடிகள் நாயனார்
சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர் என்ற தலத்தில் அவதரித்தவர் இந்நாயனார். அந்தணர் குலம் ஒங்க அவதரித்த இப்பெருந்தகையார், வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர். சாம கண்டனாகிய பரமேசுவரனது செம்பொற்பாதத்தில் சிந்தை நீங்காது தொண்டு புரிந்தவர்.
திருவாரூருக்குச் சென்று பூங்கோயிலில் உள்ள புற்றிடம் கொண்ட பெருமானைத் தரிசிப்பதைப் பெரும் பேறாகவும், மிகப்பெரிய ஊதியமாகவும் கருதி வந்தார். இவ்வாறு நியமத்துடன் வழிபட்டிருந்த போது, அக்கோயிலின் தனிச் சன்னதிகளில் ஒன்றாக விளங்கும் அரநெறியில் தீபம் ஏற்றி வழிபட விரும்பினார். மாலைக் காலம் வந்து விட்ட படியால், இருட்டுமுன் விளக்கேற்ற எண்ணினார். அண்மையில் உள்ள வீடுகளில் இருந்து நெய் வாங்கி வந்து தீபம் ஏற்றத் துணிந்தார்.
நெய் வேண்டி அவர் சென்ற வீடுகளோ சமணர்களது வீடுகளாக இருந்தன. அவர்கள் நமது நாயனாரை நோக்கி, “ கையில் தீபம் ஏந்தி ஆடும் உங்கள் கடவுளுக்கு விளக்கு எதற்கு? நெய் இங்கு இல்லை. விளக்கு எரிக்க வேண்டுமானால் தண்ணீரை விட்டு ஏற்றிக் கொள்வீர் ” என்று இகழ்ந்தனர். அது கேட்ட நமிநந்தியார் இறைவனது சன்னதிக்குத் திரும்பிச் சென்று முறையிட்டார்.
இவ்வாறு மனவருத்தத்துடன் நாயனார் முறையிட்டுப் பணிந்து வீழ்ந்த வுடன், தியாகேசப் பெருமானின் அருள் வாக்கு அசரீரியாக ஒலித்தது. “இனிக் கவலை நீங்கப்பெறுவாயாக.உனது விருப்பப்படியே எமது சன்னதியில் விளக்கேற்றுவதற்கு இக்கோயிலின் அருகிலுள்ள திருக்குளத்து நீரைக் கொண்டு வந்து ஏற்றுவாயாக.” என்ற வாக்கைக் கேட்டவுடன் சிந்தை மகிழ்ந்த நமிநந்தி அடிகள் ஒருகணம் அம்மகிழ்ச்சி மேலிட்டுச் செய்வதறியாது திகைத்த பின்னர், திருக்குளத்திற்குச் சென்று நாதன் நாமமாகிய பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை ஜபம் செய்து, குளத்து நீரைக் கொண்டு வந்து இறைவனது சன்னதியில் உலகமே அதிசயிக்கும் வகையில் நீரால் விளக்கெரித்தார். இரவு மீண்டும் தம் ஊருக்குத் திரும்பி மனையில் நியமப்படி மறுநாள் காலையில் பூஜையைச் செய்துவிட்டுத் திருவாரூருக்கு மீண்டும் சென்றார். அரநெறி வீற்றிருந்த பிரானுக்குத் தீபம் ஏற்றிப் பணிகள் பலசெய்து, வலம் வந்து, அரிய தொண்டாற்றினார். இவை எல்லாம் நாம் உய்வதற்காகச் செய்தார் என்கிறார் சேக்கிழார் பெருமான் ( “ எந்நாளும் நன்மை பெருக நமிநந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய.” – பெரிய புராணம் )
திருவாரூர்ப் பெருமான் ஒரு நாள் அருகிலுள்ள மணலிக்கு எழுந்தருளியபோது எல்லாக் குலத்து அடியார்களும் பெருமானுடன் உடன் வர, தாமும் அங்கு சென்று அவ்வருட் காட்சியில் திளைத்து மகிழ்ந்தார். எல்லோருடனும் ஒன்றியபடி மணலிக்குச் சென்றபடியால், தமது மனைக்குத் திரும்பிய நாயனார், இழிவு தீரக் குளித்து விட்டுப் பின்னர் சிவ பூஜை செய்யக் கருதித் தமது மனைவியாரிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். அப்போது இறைவர் அருளால் உறக்கம் வரவே, கனவும் வந்தது. அதில் வீதி விடங்கப் பெருமான் காட்சி அளித்து, “ திருவாரூரில் பிறந்தோர்கள் எல்லாம் நமது கணங்கள் ஆகும் தன்மையை அறிவாய்” என்று அருளிச் செய்து விட்டு மறைந்தார். தவற்றை உணர்ந்த நமிநந்தியார், அந்நிலையிலேயே,பூஜை செய்துவிட்டு மறுநாள் திருவாரூருக்கு விரைந்து சென்றார். பெருமான் அருளால் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் மணிகண்டனாகிய ஈசனது வடிவாவதைக் கண்டு தலை மீது கைகள் கூப்பியவராய் நிலமிசை வீழ்ந்து வணங்கிக் களிப்புற்றார்.
சிவனடியார்களுக்கு முறையுடன் வேண்டுவன எல்லாம் செய்து பணி செய்தபடியால், இவரைத் திருநாவுக்கரசு நாயனார் “ தொண்டர்க்கு ஆணி” என்று கூறும் பெருமை பெற்றதுடன் நீங்காப் புகழும் பெற்றார். நிறைவாகத் திருவாரூர்ப் பெருமானது பாத நீழலில் வைகாசிப் பூச நன்னாளில் சென்றடைந்தார்.
நாயனாரது அவதாரத் தலம் தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப் படுகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
புகழ்த்துணை நாயனார்
அரிசில்கரை புத்தூர் என்ற சோழ நாட்டுத்தலம் அரிசிலாற்றின் கரையில் இருப்பது. மூவர் தேவாரமும் பெற்றது. இத்தலத்துப் பெருமானை நித்தலும் ஆராதித்து வந்தவர் புகழ்த்துணையார். இவர் ஆதி சைவ மரபினர். அகத்து அடிமை செய்வதில் நிகரற்றவராக விளங்கிய அவரது பெருமையை சுந்தரர், “ அகத்து அடிமை செய்யும் அந்தணன் “ என்று சிறப்பிக்கின்றார்.இவ்வாறு சிவபெருமானைத் தவத்தோடு தத்துவத்தின் வழி நின்று வழிபட்டு வரும்போது கடுமையான பஞ்சம் அப்பகுதியில் ஏற்பட்டது. அந்நிலையிலும், அவர் “ எங்கோமான் தனை விடுவேன் அல்லேன்” என்று இராப்பகலாக அரிசிலாற்று நீரால் அபிஷேகம் செய்தும், பல்வேறு மலர்களால் அருச்சனை செய்தும் தனது பணியில் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் பசியினால் மிகவும் நலிவடைந்த நிலையிலும் ,புகழ்த்துணை நாயனார் , பூஜை செய்வதற்காக இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்யமேற்பட்ட போது , தளர்வு ஏற்பட்டு ,அயர்ச்சியினால் அபிஷேக நீர் இருந்த குடம் கையிலிருந்து நழுவி, இறைவரது திருமுடியின் மீது வீழ்ந்தது. அப்போது சிவனருளால் அவருக்குத் துயில் வந்தது.
புகழ்த்துணையாரின் கனவில் இறைவன் எழுந்தருளி, “ பஞ்சம் தீரும் வரையில் நாமே உனக்கு நித்தமும் ஒரு காசு தந்து அருளுவோம் “ என்று அருள் புரிந்தான். அதன்படி நித்தலும் பீடத்தின் கீழ் ஒரு காசு அருள , இறையருளைக் கண்டு வியந்த நாயனாரும் பஞ்சம் தீரும் வரையில் காசினைப் பெற்றுப் பசிப்பிணி நீங்கியவராகத் தமது தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்தார். இவ்வாறு செஞ்சடைப் பெருமானுக்கு மெய்யடிமைத் தொழில் செய்து வந்ததன் பயனாகப் புனிதர் பொன்னடி நீழலைச் சேர்ந்தார். இவர் முக்திப்பேறு அடைந்தது ஆவணி மாத ஆயில்ய நன்னாளாகும்.
இத்தலம் , கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது தற்காலத்தில் அழகாபுத்தூர் என்று வழங்கப்படுகிறது.
சோமாசி மாற நாயனார்
“ அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் “ என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் போற்றப்பட்டவர். மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கில் உள்ள அம்பர் மாகாளம்(திருமாகாளம்) என்ற ஊரில் தோன்றியவர். வேதம் பயிலும் அந்தணர் குலத்தவர் . சிவனடியார்களிடம் பேரன்பு பூண்டவர். அவர்களைப் பாதம் பணிந்து வணங்கி அமுது செய்விக்கும் பண்பினர். பஞ்சாட்சர ஜபம் செய்வதை நித்தலும் நியமமாகக் கொண்டவர். ஈசன் அடியார்கள் எத்தன்மையர்களாக இருந்தாலும் அவர்களே நம்மை ஆளுபவர்கள் என்ற எண்ணம் உடையவர். உமையொரு பாகனை வேத வேள்விகளால் வழிபட்டு அதன் பயனாக ஏழு உலகங்களும் இன்பம் பெறுமாறு ஈசனது மலர்க் கழல்களை வாழ்த்துவதே பேறு எனக் கருதியவர்.
திருவாரூருக்குச் சென்று தியாகேசப் பெருமானின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்த சுந்தர மூர்த்தி நாயனாரிடம் நட்பு பூண்டு மண் உலகும் விண் உலகும் போற்றும் அவரது திருவடிகளைப் போற்றி வந்தார். அதன் பயனாக ஐம்புலன்களையும் வென்று சிவலோகப் பெரு வாழ்வு பெறும் பெருவரம் பெற்றார்.
அம்பர்மாகாளத் தலபுராணம் தரும் செய்திகள்:
அம்பர்மாகாளத்தில் தான் நடத்தவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகராஜப் பெருமானே எழுந்தருளவேண்டும் என்ற பேராவல் சோமாசி மாறருக்கு வந்தது. அதனை சுந்தரரிடம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்தார். தம்பிரான் தோழரான சுந்தரர் அதனைத் தியாகேசப் பெருமானிடம் விண்ணப்பித்தார்.
சோம யாகம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாகசாலைக்குள் இறைவனும் இறைவியும் பறை வடிவில் கணபதியும் கந்தனும் இரு குழந்தைகளாக உடன்வர, எழுந்தருளினார்கள். இதனைக் கண்ட யாகம் செய்விக்கும் அந்தணர்கள் யாகசாலையை விட்டு அகன்ற போதிலும் , சோமாசி மாறரும்,சுந்தரரும் மட்டும் அகலாது அங்கேயே இருந்து, சிவபெரு மானின் திருவருளைச் சிந்தித்தபடி இருந்தனர். பெருமானும் தனது உண்மை வடிவை அவர்களுக்குக் காட்டினார்.
சோமாசிமாறருக்கும் அவரது மனைவியாருக்கும் சிவலோகமும் காட்டியருளினார்.
மேற்கண்ட வரலாற்றை ஒட்டி இத்தலத்தில் வைகாசி ஆயில்யத்தன்று யாகம் நடைபெறுகிறது. சுவாமியும் அம்பிகையும் பறை வடிவில் யாகசாலைக்கு எழுந்தருளி , இரு நாயன்மார்களுக்கும் தரிசனம் தரும் இந்த ஐதீகம், விழாவாக மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
ஸ்ரீ திருமூலதேவ நாயனார் அஷ்டோத்திர சத நாமாவளி
சிவ சிவ
விநாயக சதுர்த்தி & வரலக்ஷ்மி பூஜை நைவைத்தியங்கள்
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும் பலவகையான நைவைத்தியங்களில் கொழுக்கட்டை முக்கியமானது.
வெல்லக்கொழுக்கட்டையும்,உப்புக் கொழுக்கட்டையும் செய்யும் முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வெல்லக்கொழுக்கட்டை:
தேவையான பொருள்கள்:
- பச்சரிசி : ஒரு டம்ளர்
- தேங்காய்: ஒன்று
- வெல்லம்: 100 கிராம்
- ஏலக்காய் பொடி: 1/2 டீஸ்பூன்
பச்சரிசியை 45 நிமிடங்கள் ஊற வைத்து, நன்றாகக் களைந்து, வடிகட்டவும். அதை மிக்ஸியில் மாவாக அரைத்து, சலிக்கவும்.
1/2 டம்ளர் தண்ணீரை அடுப்பில் நன்றாகக் கொதிக்க வைத்து ,அதில் அரைத்து வைத்த மாவைக் கொட்டி மூன்று நிமிடங்கள் கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைக்கவும்.
பூரணம்: தேங்காயைத்துருவி, அதில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, இரண்டும் நன்றாகச் சேரும்படிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும். பூரணம் சூடு ஆறியவுடன், சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
மேற்படி தயாரித்த பச்சரிசி மாவை நன்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக ஆக்கி, அதை சிறிய கிண்ணம் போன்று (சொப்பு) செய்து ஒவ்வொன்றிலும், மேற்சொன்ன தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
இவ்வாறு செய்யப்பட கொழுக்கட்டைகளை அடுப்பில் இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
உப்பு கொழுக்கட்டை:
தேவையான பொருள்கள்:
- உளுத்தம் பருப்பு: 1/2 டம்ளர்
- காய்ந்த மிளகாய் வற்றல்: ஒன்று
- உப்பு: தேவையான அளவு.
உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, நன்றாகக் களைந்து அத்துடன் மிளகாய் வற்றல் -உப்பு சேர்த்து, மிக்ஸி -யில் கெட்டியாக (கொரகொரப்பாக) அரைக்கவும். பிறகு அதை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக விடவும். பின்பு அதை எடுத்து, நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
மேற்படி செய்த அரிசிமாவில் கிண்ணம் போன்ற சொப்பு செய்து, அதில் உளுத்தம் பூரணத்தை வைத்து அடுப்பில் வைத்து , பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும் பலவகையான நைவைத்தியங்களில் ஒன்றான அப்பம் செய்யும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பம் :
தேவையான பொருள்கள்:
- கோதுமை மாவு : ஒரு டம்ளர்
- அரிசி மாவு : இரண்டு ஸ்பூன்
- பொடித்த வெல்லம்: 3/4 டம்ளர்
- ரிபைண்டு ஆயில் : 200 மி.லீ
- ஏலக்காய் பொடி: சிறிதளவு
கோதுமை மாவு,அரிசிமாவு மற்றும் பொடித்த வெல்லம் ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான சூட்டில் ஒரு சிறிய கரண்டி அளவு மேற்படி கரைத்த மாவை எடுத்து எண்ணையில் ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
திருத்திலதைப்பதித் தலபுராணம்
திருச்சிற்றம்பலம்
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னோடு கூவிளம்
செங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்தழகார் மதிமுத்தமே.
—திருஞான சம்பந்தர் தேவாரம்
தெய்வப்பொன்னி நதியின் இருகரைகளிலும் சோழ வள நாட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலங்கள் பலவற்றுள் , திருத்திலதைப்பதி என்ற சிறந்த சிவஸ்தலம் ஒன்று உள்ளது. ஆதியில் “மந்தாரம்” என்று வழங்கப்பட்ட இத்தலம், திருஞான சம்பந்தரின் திருப்பதிகம் பெற்றது.இச் சிவாலயம், “மதிமுத்தம்” என்று அப்பதிகத்தில் ஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தற்காலத்தில் கோயில்பத்து என்றும் திலதர்ப்பணபுரி என்றும் வழங்குகிறார்கள்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கே நாச்சியார்கோயில் செல்லும் பாதை பிரிகிறது. இதில் சிறிது தூரத்தில் மற்றும் ஒருபாதை பிரிந்து, நம்மை சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இப்பழமையான சிவாலயம், நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது. அண்மையில் மீண்டும் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது. கோயிலுக்கு அண்மையில் நரமுக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மனித முகம் கொண்ட இவர், யானை முகம் கொள்வதற்கு முன்னமே இவ்வாறு தரிசனம் தருவதால் இவரை ஆதி விநாயகர் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் ஏராளமான அன்பர்கள் வந்து தரிசிக்கிறார்கள்.
சுவாமிக்கு முக்தீஸ்வரர், மந்தார வநேச்வரர், ஆகிய பெயர்களும், அம்பிகைக்கு சுவர்ணவல்லி, மலர்க்கொடி ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. ராம பிரான் இத்தலத்தில் தனது தந்தையாகிய தசரதருக்குத் திலதர்ப்பணம் செய்ததால், பிராகாரத்தில், அந்த ஐதீகத்தைக் காட்டும் சன்னதி இருப்பதைக்காணலாம். எனவே, அமாவாசை தர்ப்பணம் செய்வது இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறது.
அரிசில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் பிற பெருமைகளைக் காண்போம். முன்னொருகாலத்தில் திருக்கைலாயமலையில் எல்லாத்தேவர்களும் சிவதரிசனம் செய்துகொண்டிருக்கையில், விதிவசத்தால் பிரமதேவன் தனது கவனத்தை ஊர்வசியின்பால் செலுத்தியதால் சிவபெருமானது சாபத்தால் பூமிக்கு வந்து அதனைப் போக்கிக்கொள்ளத் தவம் செய்யலானார். அவ்வாறு தவம் செய்த இடமே மந்தார வனமாகும்.அங்கிருந்த புற்றினை அகற்ற முயன்றபோது, பொன்மேனியளாக அம்பிகை காட்சி அளித்து அருளினாள். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த பிரமன், அழகிய ஆலயம் ஒன்றை நிர்மாணித்தான். பிரமனது பக்திக்கு இரங்கிய பரமசிவனும் பார்வதி தேவியோடு ரிஷபவாகனத்தில் காட்சி அளித்தார். பிரமதீத்தத்தில் நீராடி, ரோகிணியன்று இங்கு வந்து தரிசிப்போர் எல்லா நலன்களும் பெற்று , இறுதியில் ஈசனது திருவடிப்பேற்றை அடையவேண்டும் என்று பிரமன் வரம் வேண்ட, இறைவனும் அவ்வாறே கொடுத்து அருளினான் என்று தல புராணம் கூறுகிறது.
இத்தலம் நான்கு யுகங்களிலும் முறையே, மந்தார வனம் என்றும், ஹரி க்ஷேத்திரம் என்றும், பிரம நாயகம் என்றும் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றது.
வாலகில்லியர்கள் என்ற குறு வடிவம்கொண்டோர்கள் வைகுண்டம் சென்ற போது, அவர்களது வடிவைக்கண்ட லக்ஷ்மியானவர் நகைக்கவே, அவர்கள் கோபமுற்று, வைகுண்டத்திலிருந்து நீங்குவாயாக என்று சபித்தனர். பின்னர் அவர்களது சொற்படி, லக்ஷ்மிதேவி, தனது நாயகனாகிய மகாவிஷ்ணுவுடன் மந்தார வனத்தை அடைந்து,சக்ர தீர்த்தத்தை உண்டாக்கித் தன்பெயரால் வைகாசிப் பௌர்ணமியன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, நியமப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்ததும் , முக்தீசப்பெருமானின் திருவருள் பெற்று, வைகுண்டம் திரும்பினர். அம்பிகையும் முன்னொருசமயம் தனது தந்தை தக்ஷன் செய்த யாகத்திற்குச் சென்ற பழி நீங்க மனதார வநேசனைப் பூசித்து, அப்பழி நீங்கப்பெற்றாள் . வடநாட்டரசன் ஒருவன் இங்கு வந்து நாரதர் சொற்படி பிதிர் தர்ப்பணங்களை இங்கு செய்து தேவ வர்மேச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூசித்து நற்கதி பெற்றான். எனவே இத்தலத்தில் பித்ரு சிரார்த்தம், அடியார்களுக்கும் அந்தணர்களுக்கும் அன்ன தானம் ஆகிவற்றைச் செய்தால் பெறும் பலன் அளவிடமுடியாதது.
தேவி தீர்த்தம், பிரம தீர்த்தம், சக்கர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், அரிசிலாறு ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
அருகில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயத்தையும்,. அம்பர்,அம்பர் மாகாளம், திருவீழிமிழலை ஆகிய பாடல் பெற்ற தலங்களையும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.
சைவ சமயாச்சார்யர் நால்வர் அஷ்டோத்தர சத நாமாவளி
சிவமயம்
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அஷ்டோத்ர சத நாமாவளி
ஒம் ஸ்ரீமத் த்ரோணிபுரேஜாதாய நம:
விப்ராய நம:
கெளண்டின்ய கோத்ரஜாய நம:
சிவவ்ரதாத்மஜாய நம:
ஸ்கந்தாய நம:
பாலாய நம:
பகவதீ சுதாய நம:
கௌரீஸ்தன்ய அம்ருதாமோத ஞானசௌவர்ண பாத்ர தராய நம:
ஞானஸம்பந்த சர்மாக்யாய நம:
தாடங்க ஸ்தோத்ர காரகாய நம:
லப்த தாள த்வயாய நம:
நீலகண்ட மித்ராய நம:
சிதப்ர த்ருசே நம:
மௌக்திக அந்தோனிக ஆஷாடாய நம:
ஜன்ம ஸித்த மஹா கவயே நம:
உபநீதாய நம:
உத்தம ப்ரஹ்மசாரிணே நம:
வேத விதாம்வராய நம:
பஞ்சாக்ஷர பராய நம:
வாக்மினே நம:
வாகீச ப்ரியவர்தனாய நம:
அபஸ்மார ஹராய நம:
நாக க்ரௌ சீத ஜ்வராபஹராய நம:
பட்டீச தத்த முக்தாட்ய விதான சத்ர பூஷிதாய நம:
மாயூர க்ஷேத்ர த்ருசே நம:
தர்மபுர வாஸாய நம:
ஜனப்ரியாய நம:
நீலநக்னப் ப்ரியாய நம:
தீராய நம:
தப்ர பக்தார்சிதாய நம:
சுசயே நம:
ஸ்கந்தனாதார்சிதாய நம:
வர்தமானீசப்ரிய கீத க்ருதே நம:
தாத யஞ்ய ஸ்வர்ண தாத்ரே நம:
வணிக் விஷ நாசகாய நம:
த்யாகேச ஸ்தோத்ர ஸந்துஷ்டாய நம:
வேதாரண்ய வாஸினே நம:
குலபக்ஷார்சிதாய நம:
ஸ்ரீமத் சோள ராஜ்ய கன்யகார்சிதாய நம:
கதம்பவன மாத்யச ப்ரியாய நம:
வாக்மி வராய நம:
கவயே நம:
ஸுமத்யாராதிதாய நம:
தத்வ தர்சினே நம:
யோகவிதாம் வராய நம:
லிங்காத்ம க்ரந்த சூர்ய அக்னி கும்பாதார சிவார்ச்சகாய நம:
ஸ்கந்த சண்ட கணாதீச பதத் வந்த்வ ப்ரபூஜகாய நம:
பக்த ஸங்க ஸமாஸ்லிஷ்ட வபுஷே நம:
வாத விசாரதாய நம:
சைவ வைதீக ஸித்தாந்த ஸ்தாபகாய நம:
ஸர்வ மந்த்ர விதே நம:
ஸ்ரீ பஸ்ம ஸ்தோத்ர க்ருதே நம:
பாண்ட்ய ராஜ ஜ்வரஹராய நம:
ப்ரபவே நம:
ஸுமதீ ரக்ஷணாய நம:
சைவாய நம:
கட வாஸோ வ்யதா ப்ரதாய நம:
ஜைன ஸம்வாத ஜிதே நம:
திவ்ய வடவே நம:
வித்யா விசக்ஷணாய நம:
ஜய பத்ர கராய நம:
சுத்தாய நம:
ப்ரதி ப்லவன பத்ர க்ருதே நம:
துஷ்டார்ஹத மத த்வம்சாய நம:
சத்ரு ஜிதே நம:
க்ஷபணாந்தகாய நம:
பாண்ட்ய ராஜ அதிதயே நம:
ஸத்வாய நம:
குலோத்தார ப்ரியாய நம:
சிவாய நம:
பாண்ட்யராஜ குலாசார்யாய நம:
சைவ ஸாம்ராஜ்ய வர்த்தனாய நம;
ஸ்த்ரீ தாலத்வ ப்ரதாய நம:
நௌகா தராய நம:
சாரி ஜிதே நம:
அவ்யயாய நம:
கும்பஸ்த அஸ்தி ப்ராண தாத்ரே நம:
யுவராஜாய நம:
அம்பிகா ஸுதாய நம:
கல்யாண வேஷதராய நம:
ஸ்னாதாய நம:
க்ருத கௌதுக மங்கலாய நம:
மஹா கல்யாண ஸம்ப்ராப்தாய நம:
ஸ்ரீமத் பத்ரபுரீ ப்ரியாய நம:
ஷோட யந்த்ராஸனாரூடாய நம:
ஸ்துத்ய க்ஷிதமீ ப்ரியாய நம:
மணி பீட ஸ்திதாய நம:
மந்த்ரே நம;
மஹா யோகினே நம:
மஹாத்யுதயே நம;
மஹா மந்த்ர தராய நம:
மாயா வாத ஜிதே நம:
மஹிஷீ ஸ்துதாய நம:
ஞான ரூபாய நம:
ஞான போதாய நம:
ஞான யக்ஞ ப்ரியாய நம:
புதாய நம:
மதுபர்காசனா ஸக்தாய நம:
கன்யா ப்ரதி க்ருஹீதவதே நம:
அச்மா ரோப கராய நம:
ஜாயாபதி தர்ம ரஹஸ்ய விதே நம:
வேதோக்த கர்ம நிரதாய நம:
பாணிக்ரஹண தத்பராய நம;
ஸ்ரீ வாஜ ஹோம ஸந்துஷ்டாய நம:
கல்யாண ஸ்தோத்ர பாடகாய நம;
பத்ரேச மஹிமா பூர்ணாய நம:
வ்ருஷ பூலப பூஜிதாய நம:
ஸ்ரீ ஞானஸம்பந்த மூர்த்தயே நம:
ஸ்ரீ குருப்யோ நம:
**************************
ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள்(அப்பர் ) அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஊர்த்வ பாடபுர வாஸாய நம:
ஓம் கீர்த்திமதே நம:
ஓம் ருஷி வம்சஜாய நம:
ஓம் ஹல்லக்ஷ்மீ தராய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் போதவதே நம:
ஓம் மாநிநீ ஸுதாய நம:
ஓம் விநீய மாநாய நம:
ஓம் லக்ஷக்ஞாயாய நம:
ஓம் திலகவதி ஸோதராய நம:
ஓம் த்யக்த வைதீகாய நம:
ஓம் தர்மாத்மனே நம:
ஓம் மத்த அர்ஹத ஸுபந்திதாய நம:
ஓம் தர்ம சேத அஹ்வயாய நம:
ஓம் ஜைனாய நம:
ஓம் குருபீட அபிஷிக்தவதே நம:
ஓம் கட வாஸ மத ஆசார்யாய நம:
ஓம் ஜைன தந்த்ர அத்வகாய நம:
ஓம் ஸுதியே நம:
ஓம் பிங்கலாய நம:
ஓம் சூல ரோகார்த்தாய நம:
ஓம் பின்சிகா குண்டிகா தராய நம:
ஓம் தார்க்ஷ்ய தீர்த ஸரித் ஸ்நாதாய நம:
ஓம் ஸோதர்யா தத்த பஸ்ம தராய நம:
ஓம் கருணா தீக்ஷிதாய நம:
ஓம் சைலாய நம:
ஓம் சூல ரோக விமுக்தவதே நம:
ஓம் தாஸ மார்க்கதாய நம:
ஓம் சுத்தாய நம:
ஓம் சிவ கைங்கர்ய மானஸாய நம:
ஓம் சூல ரோக ஹர ஸ்தோத்ர த்ராவிட காரகாய நம:
ஓம் ரஸனா ராஜாய நம:
ஓம் ஸத்வாத்மனே நம:
ஓம் பஞ்சாக்ஷர பராயணாய நம:
ஓம் வீர தேச க்ருபா பூர்ணாய நம:
ஓம் சூர்ண ஸத்மாக்ஷதாய நம:
ஓம் ஸுசயே நம:
ஓம் அம்லான வதனாம் போஜாய நம:
ஓம் க்ஷுத் த்ருஷ்ணா அதிஜிதே நம:
ஓம் முனயே நம:
ஓம் ஹாலா ஹலாசினே நம:
ஓம் வாகீசாய நம:
ஓம் சந்த்ர சீதள விக்ரஹாய நம:
ஓம் ராக்ஞே நம:
ஓம் பக்தாய நம:
ஓம் அச்ம நௌகாத்ருதாய நம:
ஓம் வராய நம:
ஓம் பஞ்சார்ண ஸ்தோத்ர க்ருதே நம:
ஓம் பூதாய நம:
ஓம் பாடலீச்வர கீத க்ருதே நம:
ஓம் வீரதே சஸ்த வாஸகாய நம:
ஓம் பல்லவேந்த்ர அர்ச்சிதாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் சைவ ஸம்ஸ்தாபன அஸக்தாய நம:
ஓம் சிவசூல வ்ருஷ அஞ்சிதாய நம:
ஓம் சிதம்பர ஸ்தோத்ர க்ருதே நம:
ஓம் ஞானஸம்பந்த ப்ரிய மானஸாய நம:
ஓம் த்விஜ புத்ர விஷ த்யாத்ரே நம:
ஓம் அபூதி சரண ப்ரியாய நம:
ஓம் வன்மீக ருத்ர ஸந்தர்சினே நம:
ஓம் சரண்யபுரி வாஸக்ருதே நம:
ஓம் தப்ர ஸ்கந்த ஆச்ரிதாய நம:
ஓம் நக்ன ப்ரியாய நம:
ஓம் சௌவர்ண சக்ரகாய நம:
ஓம் துர்பிக்ஷ க்ஷாம ஸம்ஹர்த்ரே நம:
ஓம் தீன ரக்ஷண தத்பராய நம:
ஓம் வேதாரண்ய ஹிதத்வார விதீர்ண கவிக்ருதே நம:
ஓம் மஹதே நம:
ஓம் உத்தர க்ஷேத்ர ஸந்தர்சினே நம:
ஓம் ஜம்புகேச்வர கீத க்ருதே நம:
ஓம் ஈச்வரால்லப்த பாதேயாய நம:
ஓம் விச்ராந்தாய நம:
ஓம் ஸ்தோத்ர க்ருதே நம:
ஓம் புதாய நம:
ஓம் சோணாத்ரி கீத க்ருதே நம:
ஓம் வ்ருத்தாய நம:
ஓம் தாண்டக ஸ்தோத்ர தத்பராய நம:
ஓம் கூர்தாய நம:
ஓம் ஸ்வர்ணமுகீ ஸ்நானதாய நம:
ஓம் காளஹஸ்தி ஸமாச்ரிதாய நம:
ஓம் கைலாஸ அந்வேஷிகாய நம:
ஓம் காசீ நிவாஸாய நம:
ஓம் முநிவாரிதாய நம:
ஓம் விராகாய நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் தீராய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் ஸத்குண கீர்த்தனாய நம:
ஓம் தடாக மக்னாய நம:
ஓம் ஸம்ஞப்தாய நம:
ஓம் ப்ராப்த கைலாஸ தர்சனாய நம:
ஓம் காவேரி ஸ்நான ஸந்துஷ்டாய நம:
ஓம் ஸ்ரீமத் பஞ்சநத ப்ரியாய நம:
ஓம் ஸம்பந்த ஜய ஸந்துஷ்டாய நம:
ஓம் ஸம்பந்த சிபிகா வாஹாய நம:
க்ஷேத்ர கீத கராய நம:
ஓம் அகக்னாய நம:
ஓம் ஹர ஸ்தோத்ர விதாம்வராய நம:
ஓம் சிலாரத்ன ஸமதர்சினே நம:
ஓம் ஸ்த்ரீ ஜிதே நம:
ஓம் மோஹ விவர்ஜிதாய நம:
ஓம் சைவாசார விசுத்தாத்மனே நம:
ஓம் ஸுதாஸுக்தி மதாம வராய நம:
ஓம் ஸத்யஞான ஆனந்த பரிபூர்ண அச்ருகளா அந்விதாய நம:
ஓம் ஏக அசீதிதமே பூர்ணாய நம:
ஓம் அணிமாதி த்ருணீ க்ருதே நம:
ஓம் அரண்யேச பத ப்ராப்தாய நம:
ஓம் சைத்ரபகண பூஜிதாய வாகீசாய நம:
************************
ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் அஷ்டோத்ர சத நாமாவளி

ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
ஸ்ரீமத் போகபுர உத்பவாய நம:
கோடி சந்த்ர லாவண்யாய நம:
கோடி சீதாம்சு சீதளாய நம:
மந்தஸ்மித முகாம்போஜாய நம:
கனகாஞ்சித குண்டலாய நம:
திவ்ய ஆபரண மாலாட்யாய நம:
மஹார்ஹ வஸநோபேதாய நம:
மணி காஞ்சி குணான்விதாய நம:
ஹேம யஞ்யோபவீத அட்யாயாய நம:
கஸ்தூரி திலக அன்விதாய நம:
பஸ்மதாரா தராய நம:
சைவாய நம:
பூதி ருத்ராக்ஷ தாரகாய நம:
சுந்தரேச அனுபிம்பாத்மனே நம:
ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரகாய நம:
தேவர்ஷி கண வந்திதாய நம:
மனோ பவரஸ அவேசாய நம:
பஞ்ச பாணாக்ர மானஸாய நம:
ஊர்த்வ ரேதஸெ நம:
பிரஸன்னாத்மனே நம:
காம: க்ரோத விவர்ஜிதாய நம:
ஸங்கல்பேசாய நம:
ஸதாம் ஸங்க நிரதாய நம:
ஸுத்த மானஸாய நம:
ஸங்கல்ப ஜிதே நம:
ஸ்வ ஸங்கல்பாய நம:
விச்வமாயா மனோஹராய நம:
மாயா தரண ஸமர்தாய நம:
மாகேச ப்ரிய மானஸாய நம:
சிவ த்விஜ வராய நம:
சுத்தாய நம:
சைவ ஸித்தாந்த பாரகாய நம:
ஸுமதீ கர்ப்ப ஸம்பூதாய நம:
சிவ வ்ரத ஸுதாய நம:
ப்ரியாய நம:
கமலாலய ஸஞ்சாதாய நம:
கருணாபூர்ண ஸத்கிராய நம:
கரிது வம்ச மணயே நம:
சைவ சாஸ்த்ர க்ருதே நம:
ஞான ஸுந்தராய நம:
தூலி கேளி பராய நம:
பாலாய நம:
யுவராஜாய நம:
ராஜ பூஜிதாய நம:
ஜய பத்ர ப்ரியாய நம:
லோக ஸுந்தராய நம:
வர வேஷ தராய நம:
சிவ வாரித ஸம்ஸாராய நம:
நித்ய கல்யாண பூஷணாய நம:
ஹர தாஸ வராய நம:
தாஸ பாக்ய ஸ் ந்துஷ்ட மானஸாய நம:
சிவ பஞ்சாக்ஷரீ சித்தாய நம:
த்ரி பதார்த்த விதாம் வராய நம:
ஹம்ஸ ந்ருத்ய ப்ரியாய நம:
ஸோஹம் பாவ பராயணாய நம:
த்யாகேசார்ச்ச்சன ஸ ந்துஷ்டாய நம:
சிவவாம பதாங்கிதாய நம:
சிவ கங்காம்பு ஸம்ஸ் நாதாய நம:
புண்டரீகபுர ப்ரியாய நம:
சாந்தாய நம:
ஸத்குண ஸம்பன்னாய நம :
சிதப்ர ஹ்ருதய அன்விதாய நம:
பிந்து மத்யக ஸந்தாத்ரே நம:
சங்கர ஆலோகன உத்ஸுகாய நம:
சிவைக கத சித்தாத்மதே நம:
சிவானந்த ஸ்வரூபகாய நம:
க்ஷேத்திர தீர்த்தாடன ஆஸக்தாய நம:
மாயூர பிரிய மானஸாய நம:
த்யாகேச்வர பிரியா ஸகாய நம :
ஸாகரீ கணிகா ப்ரியாய நம:
தூர்த வேஷ தராய நம:
முக்தாய நம:
சின்ன ஸம்சய விக்ரஹாய் நம:
ஸம்ப்ராப்த வ்ரீஹி சௌவர்ணாய நம:
ஸ்ருங்கலா ப்ரிய நாயகாய நம:
தேவாச்ரய கண ஆஸக்தாய நம :
பக்த ஸ்தோத்ர பராயணாய நம:
பஞ்சார்ண ஸ்துதி க்ருதே நம:
சேர கோஷ்ட தாண்டவ தர்சனாய நம:
பந்தக க்ஷேத்ர ஸ ஞ்சாரினே நம:
வகுளாத ப்ரமாண க்ருதே நம:
மதுராக்ய கவிஸ்ரேஷ்டாய நம:
ப்ரதிஞ்யா பங்க வீக்ஷனாய நம:
சிவ ஸ்ரேக்ஷனாய நம:
பாண்ட்ய ராஜ அபிவந்திதாய நம:
காவேரி தத்த ஸரண்யே நம:
சேர ராஜ ஸமர்சிதாய நம:
பூதா ஹ்ருதாத்ம த்ரவினாய நம:
ஸ்கந்த நாதார்பிதாய நம:
அசலாய நம:
அவினாசி க்ஷேத்ர வாஸாய நம:
நக்ர க்ரஸ்த வடுப்ரதாய நம:
சிவஞானப்ரத ஆசார்யாய நம:
பிராரப்த த்ரய தோஷஞாய நம:
சுத்த சைவ சிகாமணயே நம:
ச்வேத ஹஸ்தி ஸமாரூடாய நம:
கைலாஸ வாஸ ஸுந்தராய நம:
********************
ஸ்ரீ மாணிக்க வாசக ஸ்வாமிகள் அஷ்டோத்திர சத நாமாவளி

ஸ்ரீமத் வாதபுரீச்வராய நம:
ஸசி வாந்வய பூஷணாய நம:
சம்பு பாதாத்மஜாய நம:
ஸத்யாய நம:
சிவஞானவதீ ஸுதாய நம:
அரிமர்த்தன பூபால ப்ரியாய நம:
ச்ருதி வீசக்ஷனாய நம:
வாஸநாஸக்தாய நம:
பௌத்த கண்டன தீக்ஷிதாய நம:
ஆகம உத்தாரகாய நம:
சைவாய நம:
சைவாசார ரதாய நம:
ஸுஹ்ருதே நம:
ஸதா ஸஷ்டி கலா அபிக்ஞாய நம:
மனு வித்யா விசாரதாய நம:
வஸ்து தத்வ ரதாய நம:
சுத்தாய நம:
சாந்தாய நம:
கால விசக்ஷனாய நம:
மந்த்ர தந்த்ர வரைய நம:
கார்ய கோவிதாய நம:
ஞான பண்டிதாய நம:
கர்த்தவ்ய அபிரதாய நம:
உத்யோகாய நம:
பிரஜா பாலன தத்பராய நம:
நீதி சாஸ்த்ர விதாம ச்ரேஷ்டாய நம:
த்ருட பிரக்ஞாய நம:
ஸுதீவராய நம:
சத்ரு பேதினே நம:
ப்ரியா ஸக்தாய நம:
ஸந்தி கார்ய விஸக்ஷணாய நம:
ந்ருப துஷ்டி ப்ரதாய நம:
ஞ்யேயாய நம:
ஸஹாயாய நம:
விநயான்விதாய நம:
சூக்ஷ்ம புத்தயே நம:
உபாயக்ஞாயாய நம:
ஸத்வ சிந்தாவராய நம:
பராய நம:
ஸாமவிதே நம:
தண்ட விதே நம:
ஸத்வாய நம:
ஸசி வேந்த்ராய நம:
ஸதாம் ரதாய நம:
சிக்ஷ அத்யங்க கலாபக்ஞாயாய நம:
மீமாம்ஸா ந்யாய தத்வ விதே நம :
ஆயர்வேத தனுர்வேத ஞ்யாய நம:
நாட்ய வேத விதாய வரதாய நம:
புராணாதி அர்த சாஸ்த்ரக்ஞாய நம:
ஆகமார்த்த விசாரதாய நம:
அச்வ லக்ஷண சாஸ்த்ரக்ஞாய நம:
நானா பாஷ்ய விசாரதாய நம:
ராஜ ஸம்மாநிதாய நம:
ப்ரம்ம ராஜ நாம அன்கிதாய நம:
யதே நம:
அன்னதான பராய நம:
சீலாய நம:
வித்த சாட்ய விவர்ஜிதாய நம:
ஸ்வதர்ம நிரதாய நம:
யோகினே நம :
ராஜகார்ய துரந்தராய நம:
துரக அன்வேஷன ஆக்ஞப்தாய நம:
தேசிக அன்வேஷண உத்ஸுகாய நம:
பாண்ட்ய த்ரவிண ஸம்ப்ராப்தாய நம:
பூதி ருத்ராக்ஷ தாரணாய நம:
ஆஸ்திகாய நம:
குண ஸம்பன்னாய நம:
சிவ பக்த சிரோமணயே நம:
குருவாக் பாலகாய நம:
ஸ்ரத்தா பக்திமதே நம:
விஜிதேந்த்ரியாய நம:
க்ருதக்ஞ்யாய நம:
விவேகினே நம:
சிவமானஸாய நம:
சுஷ்ருதா அபிரதாய நம:
அக்ரோதாய நம:
க்ஷமாவதே நம:
தேஜஸாம் நிதயே நம:
பரிபாகமலாய நம:
சக்திநிபா தத்வேன லக்ஷிதாய நம:
ஸம்ஸார நாசகாய நம:
சம்பு பத அன்வேஷண தத்பராய நம:
பக்தாய நம:
மாயா விலாஸக்ஞாய நம:
சிஷ்யாய நம:
வைராக்ய வர்தனாய நம:
சிவபக்த ப்ரியாய நம:
முமுக்ஷுத்வாதி ஸம்யுதாய நம:
நித்ய அநித்ய விவேகக்ஞாய நம:
குரு அணுக்ரஹ பாக்யவதே நம:
குந்தமூல ஸமாஸீத ஞான தேசிக ஸேவகாய நம:
ஸ்பர்ச ஞானவதீ தீக்ஷா ஸம்சுத்த அத்வ ஸமாயுதாய நம:
பாச வித்சேத மாத்ரேண மாயாதி மல பேதகாய நம:
சிவ அபிவ்யக்தி நிர்பீகாய நம:
சிவஞான ப்ரபூர்ணவதே நம:
தேஹார்த்த பிராண ஸந்தாத்ரே நம:
பிரமானந்த ஹர்ஷணாய நாம:
ஸம்சாரவாஸதா நஷ்டாய நம:
சிவ மந்த்ர பராயணாய நம:
சிவ த்ராவிட வாக்ஜால ஸ்தோத்ர க்ருதே நம:
ஞான தாயகாய நம:
சிவ ப்ரஸாத நிர்மாத்ரே நம:
பாண்ட்ய ராஜ ஸுதண்டித்தாய நம:
ஆகாச வாக் அபிவ்யக்தாய நம:
முக கன்யா ஸுவாக் ப்ரதாய நம:
மணி வாசக ஸத் பக்தாய நம:
***********************
மஹா கும்பாபிஷேகம்- யாகசாலை சாமான் பட்டியல்
சிவாலயங்களில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்கான விதிமுறைகளைச் சிவாகம வழியில் பின்பற்றி நடத்துவது அத்தியாவசியமாகும். இதற்குத் தேவையான பொருள்கள் பற்றிய விவரம் இங்கு தரப்பட்டுள்ளது. பொருள்களின் அளவு தேவைக்கேற்ப வேறுபடும். ஆகவே இங்கு தரப்பட்டுள்ள விவரம் பொதுவானது மட்டுமே. மேலும் விவரங்களைத் தங்களது சர்வசாதக சிவாசாரியார் மூலம் பெறலாம்.
பந்தக்கால் முகூர்த்தம் செய்யத் தேவையானவை:
மஞ்சள் தூள் குங்குமம்
விபூதி ; சந்தனம்
முகூர்த்தக்கால்( சுண்ணாம்பு, காவி அடித்தது) குத்துவிளக்கு ; குடம்; சொம்பு
ஆசன பலகை ; தாம்பாளம் ; கிண்ணம்.
கை மணி ; தூபக்கால்; தீபக்கால்;
தீபாராதனைத் தட்டு.
மாவிலை கொத்து தர்ப்பைக் கட்டு; முளைக் குச்சி கட்டு. நெல்; பச்சரிசி ; நுனிவாழை இலை. நவதான்யம் தேங்காய்; வாழைப்பழம்
பூமாலை; பூச்சரம் ; உதிரி பூ; வில்வம். வெற்றிலை,சீவல் நல்லெண்ணெய்,ஊதுபத்தி,சாம்பிராணி,திரிநூல்,தீப்பெட்டி கற்பூரம். சிவப்பு வண்ண ரவிக்கை துணி நைவைத்தியம் : சக்கரைப் பொங்கல்; பசும்பால்
மண் வெட்டி; கடப்பாரை; அரிவாள் ஆகிய உபகரணங்கள்.
மஹா கும்பாபிஷேக யாகசாலைக்குத் தேவையான பொருள்கள்:
மஞ்சள் தூள் குங்குமம் விபூதி சந்தனம் ஊதுபத்தி,சாம்பிராணி,திரிநூல்,தீப்பெட்டி கற்பூரம். நல்லெண்ணெய் ; தீப எண்ணை
பசுநெய் பசும்பால், பசும் தயிர்,கோஜலம் ,கோமேயம்
கங்கை ஜலம் முதலிய புண்ணிய தீர்த்தங்கள் அச்சு வெல்லம் நாட்டு சர்க்கரை அவல் ;பொட்டுகடலை
அரிசி மாவு திரவிய பொடி
தேன் பேரீச்சை (விதை நீக்கியது) டைமன் கல்கண்டு
திராக்ஷை முந்திரி
தட்டை பாக்கு ;சீவல்
கோதுமை காராமணி
முழு துவரை முழு பயறு கொண்டைக்கடலை
மொச்சை உளுந்து
எள்ளு ; கொள்ளு ;நெல்
பச்சரிசி ; தவிடு
நெல்பொரி (சுத்தமானது) வரகரிசி ( ஸ்தூபிக்குத் தேவையான அளவு)
முப்புரிநூல் கண்டு ; பஞ்சவர்ண நூல்: கரும் சிவப்பு; பச்சை;நீலம்;மஞ்சள்;வெளிர் சிவப்பு; சிவப்பு பட்டுக் கயிறு (கனமானது)
ஐந்து பிரி சணல் மூன்றுபிரி சணல்
பிளாஸ்டிக் குடம்;பிளாஸ்டிக் மக்;
சிறிய பை; பெரிய பை
நாட்டு மருந்து சாமான்கள்:
ஏலக்காய்; பச்சை கற்பூரம் கிராம்பு ஜாதிக்காய்
ஜாதி பத்திரி; சண்பக மொட்டு கஸ்தூரி மஞ்சள் ; குங்குமப்பூ விளாமிச்சை வேர் ; வெண் கடுகு சந்தனாதி தைலம்
ரோஸ் எசென்ஸ்; பன்னீர் காவி
சரகு;தொன்னை அஷ்டபந்தன மருந்து (தேவைக்கேற்ப) வெண்ணை
ஹோம சாமான்கள் :
பூலாங் கிழங்கு ; கோரைகிழங்கு
வலம்புரிக்காய்
இடம்புரிக்காய் ; கடுக்காய் ;மாசிக்காய் ; தான்றிக்காய்; ஜாதிக்காய் வெட்டிவேர் ; நன்னாரி வேர் தக்கோலம் ; வெண் கடுகு நெல்லிமுள்ளி
ஜடாமாஞ்சி ; அதிமதுரம் ; சுக்கு ; சித்தரத்தை வால்மிளகு ரோஜாமொட்டு சண்பக மொட்டு குங்கிலியம் ; மட்டிப்பால்
கண்டதிப்பிலி ;அரிசி திப்பிலி கஸ்தூரி மஞ்சள் ஜாதிபத்திரி பச்சைகற்பூரம் கிராம்பு; ஏலக்காய் கருங்காலி கஸ்தூரி கோரோசனை ; புனுகு
ஜவ்வாது ; அரகஜா
காய்-கனி வகைகள்:
இலைக்கட்டு
பூசணிக்காய்
தேங்காய் (அடர்த்தியான நாருடன் கூடியது)
நார் உரித்த தேங்காய்
முழு மட்டை தேங்காய்
காய்ந்த தென்னை மட்டை
இளநீர்
பூவன் வாழைப் பழம்
ரஸ்தாளி வாழைப் பழம் கற்பூரவல்லி வாழைப் பழம்
ஆப்பிள்; ஆரஞ்சு ; மாதுளை
கொய்யா
திராக்ஷை
நாரத்தை; எலுமிச்சை
வெற்றிலை
ஜவுளி வகைகள்:
9×5 வேஷ்டி 8 முழ வேஷ்டி & 4 முழ அங்கவஸ்திரம் 3 முழ அங்கவஸ்திரம் 4 முழ காசி துண்டு (சிவப்பு) 9 கஜம் காட்டன் புடவை 6 கஜம் காட்டன் புடவை 3 முழ துண்டு 80 cm கலசத் துணி பட்டுத் துணி மூர்த்தி வஸ்திரங்கள்: (தேவைக்கேற்ப) பணியாளர் வஸ்திரங்கள் ( தேவைக்கேற்ப)
ஒவ்வொரு கால பூஜைக்கும் நைவைத்தியம்
பூவகைகள்
பாளையுடன் கூடிய தென்னம் பூ
அனுக்ஞை, கணபதி பூஜை/ ஹோமம் ,நவக்ரஹ ஹோமம் ,தன பூஜைக்கு: ஒருமுழ மாலை( 15 ) ; 2 முழ கரவாரம்( 3); கொண்டை மாலை (3 ) செட் ; காது தோடு (3)செட் ; சரம்(25) முழம்; உதிரி பூ: (2) கிலோ.அருகம் புல்;வில்வம்,வன்னி,தாமரை ஆகியவை.
பிரவேச பலி;ரக்ஷோக்ன ஹோமம்;வாஸ்து சாந்தி ஆகியவற்றுக்கு: ஒரு முழமாலை( ) ஒன்றரை முழ மாலை ( ); 2 முழ கரவாரம்( 3); கொண்டை மாலை (3) செட்:காது தோடு: (1 )செட்; சரம்(25) முழம்; உதிரி பூ: (2) கிலோ.அருகம் புல்;வில்வம்,வன்னி,தாமரை,அரளி ஆகியவை.
பரிவார யாக சாலைக்கு: ஒரு முழ மாலை: (50); ஒருமுழ உள்ளாரம், ஒன்றரை முழ கரவாரம், கொண்டைமாலை, காது தோடு ஆகியன தலா 4 செட்.
ஒவ்வொரு கால சுவாமி-அம்பாள் யாக சாலைக்கும் தலா இரண்டுசெட் வேண்டியவை:
ஒன்றரை முழ கரவாரம்: 2 முழ கரவாரம்; கொண்டை மாலை,:காது தோடு:(2 )செட்;சரம்(150) முழம்; உதிரி பூ:(10)கிலோ.அருகம் புல்;வில்வம்,வன்னி,தாமரை,அரளி திருவாசி தட்டி(2) ஆகியவை.
கும்பாபிஷேகத்தன்று மாலை திருக்கல்யாணத்திற்குத் தேவையானவை:
ஒன்றரை முழ கரவாரம்: 2 முழ கரவாரம்; கொண்டை மாலை,:காது தோடு:(2 )செட்;சரம்(25) முழம்; உதிரி பூ:(10)கிலோ.;வில்வம்,வன்னி,தாமரை,அரளி திருவாசி தட்டி(2),3 முழ பணி செட்,மாற்று மாலை(4) ஆகியவை.
மண் பாண்டங்கள்:
15 லிட்டர் பானை:
2 லிட்டர் வாணை /மடக்கு : 4
1½ லிட்டர் கலயம்: 300
½ லிட்டர் மடக்கு( விளிம்புடன்): 20
பெரிய அகல் : 20
புதிய உலோக சாமான்கள்:
8 லிட்டர் பித்தளை குடம் (8)
ஒரு லிட்டர் பித்தளை சொம்பு: ( 30)
பிற உலோக சாமான்கள்:
8 லிட்டர் குடம்: 3
6 லிட்டர் குடம்: 30
சொம்பு : 20
கைமணி : 2
குத்து விளக்கு : 6
தீபாராதனை தட்டு : 2
பெரிய தாம்பாளம் : 5
தூபக்கால் : 2
தீபக்கால் : 2
அலங்கார தீபம் : 2
பூர்ணகும்ப தீபம் : 2
பஞ்ச ஹாரத் தட்டு : 2sets
சோடசோபசாரம் : 2 sets
கற்பூர கிளை : 2
***********
வெள்ளி தகடு ,வெள்ளி கம்பி; வெள்ளி காப்பு. நவமணிகள்
*************
இதர சாமான்கள்:
ஆசன பலகை: 25 அஷ்டமங்கல பலகை 36 ஸ்ருக்கு; ஸ்ருவம் : தலா 14 பெரிய மூங்கில் தட்டு: 15 சிறிய மூங்கில் தட்டு: 10 மூங்கில் கூடை: 2 விசிறி: 15 மாவிலை: தர்ப்பைக் கட்டு ;தர்ப்பைக் கயிறு ஆல்,அரசு,மா,வன்னி,வில்வம் சமித்துகள் கனமான மரக்கட்டைகள் (ஒரு முழ நீளத்துடன்)
கத்தி,அரிவாள் மனை, அரிவாள்
யாக சாலை கொட்டகை யாக சாலை சாமான்களைப் பாதுகாப்பாக வைக்கும் இடம் வேதிகை ;ஹோமகுண்டம் யாக சாலை அலங்காரங்கள் மங்கள வாத்தியம் (நாதஸ்வரம்) வேத- திருமுறை பாராயணங்கள் உபசார குடை 2 தீவட்டி 2 சில்லரை தக்ஷிணை சிவாசார்யர் சம்பாவனை :
மண்டலாபிஷேகத்திற்குத் தேவையான பொருள்கள் (ஒவ்வொரு நாளும்): நல்லெண்ணெய்,பசும்பால்,அர்ச்சனை சாமான்கள்,புஷ்பம் ஆகியவை.
திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா
இதுவரை எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , ” பெருங்கடல்” என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. நடுக்கடலுள் அகப்பட்டவன் சாதாரணத் துடுப்பைக் கொண்டு எப்படிக் கரை சேர முடியும். அதனால் தான், பஞ்சாக்ஷரமாகிய துடுப்பைக் கொண்டு கரை சேரும் வழியை அருளுவாய் எனத் திருவாசகம் வேண்டுகிறது.
சத்குருநாதனது அருளால் பிறவிக்கடலைத் தாண்டி இறைவனை அடைவது சுலபமாகிவிடுகிறது. பிறவியாகிய பெரிய கடலைத் தாண்டுவதற்குத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களை ஒதிவந்தாலே போதுமானது என்கிறார் நம்பியாண்டார் நம்பிகள். ஏனென்றால் அப்பதிகங்களே தோணியாக ஆகி, நம்மை ஏற்றிக்கொண்டு கரை சேர்ப்பன என்று அவர் அருளினார். அவை ஞானத் தமிழ்ப் பனுவல்கள் என்பதால் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகின்றன.
சம்பந்தப்பெருமான் தல யாத்திரையாக சோழ நாட்டுத் தலங்களைத் தரிசித்து வந்தபோது, காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் மறுகரையில் இருந்து பஞ்சாரண்யங்களுள் ஒன்றான வில்வாரண்யம் தெரிவதைக் கண்டார். அந்த ஆறு, முள்ளியாறு என்றும் வழங்கப்படும். வில்வாரண்யத்தின் மற்றொரு பெயர் திருக் கொள்ளம் பூதூர் என்பதாகும். கூவிளம் பூதூர் என்பது இவ்வாறு மாறிற்று என்பர். கூவிளம் என்பது வில்வத்தைக் குறிக்கும்.
வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது. எனவே,இத்தலம், பிரம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது. தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, வில்வ வனம் ஆகியது என்பர்.
பொதிகை மலையிலிருந்து இங்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் , வெட்டாற்றில் நீராடி, இறைவனை வழிபட்டு , ரிஷப வாகன தரிசனம் பெற்றார். நதிக்கும் அகஸ்திய காவேரி என்ற பெயர் ஏற்பட்டது. அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது. கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு இத்தலத்திற்கு வந்து இரவு முழுதும் கண் விழித்திருந்த திருடனும் நற்கதி பெற்றான். இத்தலத்தின் அருகே, பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான இடைக்காட்டுச் சித்தரின் கோயில் அமைந்துள்ளது.
முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்) உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.
கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள வலங்கைமானிலிருந்து , குடவாசல் செல்லும் பாதையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செல்லூர் நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 1 கி.மீ. தொலைவு நடந்து வந்து கோவிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து குடவாசல்,ஓகை வழியாகக் கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கியும் வரலாம். குடவாசலில் இருந்து செல்லூர் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
செல்லூரில் உள்ள குணாம்பிகை சமேத கைலாச நாத சுவாமி ஆலயம் தொன்மையானதும் தரிசிக்க வேண்டுவதும் ஆகும். பிராகாரத்தில் எங்கு நோக்கினாலும் நந்தியாவட்டை மரங்கள் பூத்துக் குலுங்குவதைக் காணலாம். தனது கலைகளை இழந்த சந்திரன் இங்கு வழிபட்டு, மீண்டும் அக்கலைகளைப் பெற்றான்.சந்திரனும் சூரியனும் வழிபட்ட புவன பைரவ மூர்த்தி சக்தி வாய்ந்தவர். வேண்டிய வரம் யாவும் தருபவர். நாகநாதர், சட்டைநாதர் ஆகிய லிங்கமூர்த்திகளின் சன்னதிகள், மூலஸ்தானத்தின் இருபுறமும் அமைந்துள்ளன. இடைவிடாது சித்தர்கள் வழிபடும் புண்ணிய மூர்த்தியாகக் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியவளாகக் குணா ம்பிகையும் அருட்காட்சி வழங்குகின்றனர். இந்த ஆலயம் திருப்பணி பெற்று, 2.5.2013 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுப் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.
செல்லூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது அபிவிருத்தீச்வரத்தில் உள்ள அபிமுக்தீச்வரர் ஆலயம். இந்த ஆலயம் மேற்கு நோக்கியது. திருப்பணி செய்யப் பெற்று வண்ணப்பூச்சுடன் அழகுற விளங்குகிறது.
திருக்கொள்ளம்பூதூர் சிவாலயத்தை முழுதும் கருங் கல்லால் அமைத்து மகத்தான சிவபுண்ணியச் செயலைச் செய்துள்ளவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். நச்சாந்துப்பட்டி பெ. ராமன் செட்டியாரும்,பெ.லட்சுமணன் செட்டியாரும் 1930 ல் இக்கருங்கல் திருப்பணியைத் தொடங்கி, ஈசுவர ஆண்டு ஆனி 14 ம் தேதி ஞாயிறன்று ( 27.6.1937 ) பெரும் பொருட் செலவில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். இவர்களது உருவச்சிலைகள் அம்பாள் (சௌந்தர நாயகி ) சன்னதியின் முன்னர் அமைக்கப்பட்டுள்ளது. வீதியில் சத்திரம் ஒன்றையும் அமைத்துள்ளார்கள்.
கோயிலுக்கு முன் புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.கோவிலின் முன் வாயிலில் கோபுரம் இல்லை. ரிஷப வாகன சுதை காணப்படுகிறது , வாயிற் சுவரில் சம்பந்தர் ஆற்றில் நாவன்மையால் ஓடம் செலுத்திய அற்புதத்தைச் சுதை வடிவில் வண்ணப் பூச்சோடு அமைத்துள்ளார்கள். இருபுறமும் விநாயகர் திருவுருவங்கள் உள்ளன.சலவைக் கல்லில் தலத் திருப்பதிகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டினால் வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது. இதை ஒட்டி மஹா லக்ஷ்மியின் சன்னதி உள்ளது.இரண்டாம் பிராகாரத்தில் பூச்செடிகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. அடுத்த வாயிலில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. இருபுறமும் பொய்யாக் கணபதி,தண்டபாணி திருவுருவங்கள் உள்ளன.
உட்பிராகாரத்தில் மடைப்பள்ளியும், நால்வர், ஆதி வில்வமரம், வலம்புரி விநாயகர், சோமாஸ்-கந்தர் ஷண்முகர், மகாலக்ஷ்மி ,பள்ளியறை, பைரவர்,நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். கோஷ்டங்களில் கணபதி,தக்ஷிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகிய மூர்த்திகளைத்தரிசனம் செய்கிறோம். அம்பிகையின் சன்னதி தெற்கு நோக்கியது. அழகியத் திருவுருவக் காட்சியை நமக்கு அருளுகிறாள் அன்னை. மூலவரான வில்வாரண்ய மூர்த்தியின் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் பிறவி பெற்ற பயனை அடைகிறோம்.
திருக்கொள்ளம்பூதூரைத் தரிசிக்கத் திருஞானசம்பந்தர் அடியார்களுடன் எழுந்தருளியபோது வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மறுகரையில் உள்ள ஆலயத்தை அடையப் பரிசில் மூலமாகவே செல்ல வேண்டியிருந்தது. வெள்ளத்தால், படகு விடுவோரும் அப்போது இல்லாததால் , சம்பந்தர், அடியார்களோடு பரிசிலில் ஏறித் தனது நாவன்மையே கோலாகக் கொண்டு ” கொட்டமே கமழும்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் துவங்கியதும், ஓடம் தானாகவே அந்த ஆற்றில் செல்லத் துவங்கியது. ” ஓடம் வந்து அணையும் ” என்ற பாடலை அருளும் போது பரிசில் மறுகரையை வந்து அடைந்தது, இந்த அற்புதத்தைச் செய்தவாறு அப்பதிகத்தை நிறைவு செய்தபடி, ஆலயத்தை வந்தடைந்து பெருமானைத் தரிசித்தார் சம்பந்தர் என்று பெரிய புராணம் கூறுகிறது.
இவ்வாறு வெட்டாற்றில் ஓடம் செலுத்தி ஞான சம்பந்தர் அற்புதம் செய்ததை ஆண்டு தோறும் ஐதீக விழாவாக நடத்தி வருகிறார்கள். ஐப்பசி அமாவாசையைத் தொடரும் பிரதமை அன்று, இவ் விழா நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் பலர் இதனைத் தரிசிக்க வருகின்றனர். இரவு சுமார் 10 மணி அளவில் திருஞான சம்பந்தர் , அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார். திரு வீதி எங்கும் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் பெருமானுக்கு உற்சாக வரவேற்பு. வெடி மற்றும் வாண வேடிக்கை முழக்கம் ஒருபுறம். இரவு சுமார் 1 மணிக்கு ஆற்றங்கரையை அடைகிறது பல்லக்கு.
விழாக்காண வந்தவர்கள் படகில் ஏறிக்கொண்டு மறு கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார்கள். நிறைவாக ஞானசம்பந்தப்பெருமான் பரிசிலில் எழுந்தருளுகிறார். அக்கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார். அங்கு ஒரு சிறிய சிவாலயம் உள்ளது. அங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முடிந்தவுடன், மறு நாள் விடியற்காலை சுமார் 5 மணிக்குத் திருப் பதிகம் பாடியவாறே ஒடமேறி த் திருக் கொள்ளம்பூதூர் வந்தடைகிறார் சம்பந்தர்.
இதே சமயத்தில் கோயிலில் இருந்து சுவாமி அம்பிகையோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியில் சம்பந்தப்பெருமானுக்கு சுமார் 6 மணி அளவில் எதிர் காட்சி அளித்தருளுகிறார். இந்த அருட் காட்சியை நாமும் கண்டு நெகிழ்கிறோம். கண் பெற்ற பயன் பெறுகிறோம். சம்பந்தர் பதிகத்தை நாமும் பாடுகிறோம். நதி வெள்ளத்தைத் தாண்டும் அற்புதம் செய்த அப்பதிகத்தை ஓதியதால் பிறவிப் பெருங்கடலையும் நிச்சயமாக நீந்தி வீடு பெறுவோம் என்ற நிறைவுடன் ரிஷப வாகன தரிசனம் கண்ட கண்கள் வேறொன்றையும் காண வேண்டுமோ என்ற பேரின்பத்தில் திளைத்துக் கண்கள் நீர்மல்க அவ்விடத்தை நீங்க மனமில்லாமல் நிற்கிறோம்.









