Category Archives: Nayanmars
முனையடுவார் நாயனார்
சோழ நாட்டிலுள்ள மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் முனையடுவார் நாயனார். இத்தலத்து இறைவரை இந்திரன், சூரியன்,காளி,நண்டு ஆகியோர் பூசித்துள்ளனர். அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் இத்தலத்தின் மீது தேவாரத் திருப்பதிகங்கள் பாடி அருளியுள்ளனர். உலகில் பிறந்த பயனை அடைவது, சிவனடியார்களுக்கு உணவளிப்பதும், பெருமானது திருக் கோயில்களில் திருவிழாக் காண்பதும் ஆகிய … Continue reading
நமிநந்தி அடிகள் நாயனார்
சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர் என்ற தலத்தில் அவதரித்தவர் இந்நாயனார். அந்தணர் குலம் ஒங்க அவதரித்த இப்பெருந்தகையார், வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர். சாம கண்டனாகிய பரமேசுவரனது செம்பொற்பாதத்தில் சிந்தை நீங்காது தொண்டு புரிந்தவர். திருவாரூருக்குச் … Continue reading
புகழ்த்துணை நாயனார்
அரிசில்கரை புத்தூர் என்ற சோழ நாட்டுத்தலம் அரிசிலாற்றின் கரையில் இருப்பது. மூவர் தேவாரமும் பெற்றது. இத்தலத்துப் பெருமானை நித்தலும் ஆராதித்து வந்தவர் … Continue reading
சோமாசி மாற நாயனார்
“ அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் “ என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் போற்றப்பட்டவர். மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கில் உள்ள அம்பர் … Continue reading
உருத்திர பசுபதி நாயனார்
“உருத்திர பசுபதிக்கும் அடியேன் ” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பெற்றவர் தலையூர் என்ற தலத்தில் தோன்றிய ருத்திர பசுபதி நாயனார். தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்களில் ஊர்கள் இருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் , ஆக இரு இடங்கள் … Continue reading
இயற்பகை நாயனார் சரித்திரம்
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பாடப்பெற்றது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சாயாவனத்தில் … Continue reading
திருமூலதேவ நாயனார் சரித்திரம்
திருமூலதேவ நாயனார் சரித்திரம் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருமூலரை , ” நம்பிரான் திருமூலன் ” என்று பரவுகிறார் சுந்தர மூர்த்தி நாயனார். … Continue reading
சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம்
சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம் திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடைய பிரதிபிம்பமாகத் தோன்றி ,இறைவனிடம் அணுக்கத் தொண்டராக இருந்த சுந்தரர், ஒருசமயம் யாவரும் நெருங்கவும் … Continue reading